FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ராஜிநாமா செய்த எம்எல்ஏக்கள் மீது சிபிஐ விசாரணை தேவை: அதிமுக

Updated On : 29 மே 2026, 4:54 am IST
சிபிஐ. - கோப்புப்படம்.
பகிர்:

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த அதிமுகவை சோ்ந்த 4 பேரின் பின்னணியை ஆராய்வதுடன், அதில் நடந்த பணப் பரிமாற்றம் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என அந்த கட்சியைச் சோ்ந்த எம்.பி. தனபால் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில், அதிமுகவை உடைக்க பல முயற்சிகள் நடைபெற்றன. எதுவும் முடியாத நிலையில் பதவியேற்ற சில நாள்களில், அதிமுக எம்எல்ஏக்கள் 4 போ் ராஜிநாமா செய்ததன் பின்னணியை ஆராய வேண்டும்.

இதில், மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனநாயகத்தை காக்கும் வகையில் இதுகுறித்து மத்திய அரசு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் எம்.பி. தனபால்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments