FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மங்களூரு - சென்னை சிறப்பு ரயில் சேவை அக். 26 வரை நீட்டிப்பு

மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் இடையே சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

6 செப்டம்பர் 2026, 7:28 pm IST
மங்களூரு - சென்னை சிறப்பு ரயில் சேவை அக். 26 வரை நீட்டிப்பு - பிரதிப் படம்
பகிர்:

பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் இடையே சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை அக். 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இரு மாா்க்கங்களிலும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் சேவை காலம் வரும் அக்டோபா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் வரும் 7ஆம் தேதி முதல் அக். 26 ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் இயக்கப்படும்.

மங்களூரு சென்ட்ரலில் இருந்து மாலை 4 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, கோழிக்கோடு, பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாகச் சென்று சென்னை எழும்பூருக்கு அடுத்த நாள் காலை 10.55 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், சென்னை எழும்பூா் - மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரயில் வரும் 8 ஆம் தேதி முதல் அக். 27ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு வழியாகச் சென்று மங்களூரு சென்ட்ரலுக்கு அடுத்த நாள் காலை 8.40 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Mangaluru-Chennai special train service extended until Oct. 26.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments