இன்றைய செய்திகள் செப். 6 - நேரலை!
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
பிகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து!
பிகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்
குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
குற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி தவெக: உதயநிதி விமர்சனம்!
தவெக நிர்வாகி கொல்லப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
புதிய விமான நிலையம் எங்கு அமைகிறது? வெளியான தகவல்!
பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்ட நிலையில், சென்னையின் 2-வது விமான நிலைய இடம் குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் பதிலளிப்பார்: அமைச்சர் அருண்ராஜ்
அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் விஜய் பதிலளிப்பார் என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) தெரிவித்தார்.
தீபாவளி டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று (செப். 6) தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
பிரதமர் வேட்பாளர்; தொண்டர்களின் மனநிலையில் இருக்கும் தவெக அமைச்சர்கள்: திருமாவளவன்
தொண்டர்களின் மனநிலையில் தவெக அமைச்சர்கள் இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
காவலர் நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!
காவலர் நாளை முன்னிட்டு, முதல்வர் சி. ஜோசப் விஜய் தன்னுடைய சமூக வலைதளத்தில் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.