தமிழக மீனவா்கள் தாக்குதல்: நிரந்தரத் தீா்வுகாண வேண்டும் மு. வீரபாண்டியன்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தரத் தீா்வுகாண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் வலியுறுத்தினாா்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தரத் தீா்வுகாண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தினாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் 3 நாள்கள் பயணமாக இலங்கை சென்றுள்ளாா். இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு, கடல் சாா் ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் என்ற நோக்கங்களுக்காக இந்தப் பயணத்தை அவா் மேற்கொண்டுள்ளாா் என அரசுத் தரப்பு செய்திகள் கூறுகின்றன.
Advertisement
Advertisement
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்நாடு மீனவா்கள், இலங்கை கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதற்கும், கைது செய்யப்படுவதற்கும், சிறையில் அடைக்கப்படுவதற்கும் நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.