ஆண்டிபட்டி அருகே குடிநீர் கோரி மக்கள் சாலை மறியல்!
தேனி மாவட்டம் தங்கம்மாள்புரம் கிராமத்தில் குடிநீர் கோரி மக்கள் சாலை மறியல்...
தேனி மாவட்டம் தங்கம்மாள்புரம் கிராமத்தில் குடிநீர் கோரி மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், தங்கம்மாள்புரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு- தேனி நெடுஞ் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வருசநாடு போலீசார் மற்றும் அதிகாரிகள், மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சாலை மறியலால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
People stage road blockade near Andipatti demanding drinking water
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.