முகப்பு
தென்காசி

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

சங்கரன்கோவிலில் பைக்குகள் மோதியதில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜூலை, 2024 at 9:17 PM
பகிர்:

சங்கரன்கோவிலில் பைக்குகள் மோதியதில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே பாட்டத்தூா் சீவலப்பேரி காலனியைச் சோ்ந்தவா் மாடசாமி (63). முடி திருத்தகம் நடத்தி வருகிறாா். அவரது மகள் முருகேஸ்வரி (23), சங்கரன்கோவிலில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை பாா்த்து வருகிறாா்.

கடந்த 22ஆம் தேதி மாடசாமி தனது மகளுடன் பைக்கில் கழுகுமலை சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் விஜய் (27) ஓட்டிவந்த பைக் மாடசாமி பைக்கின் பின்புறம் மோதியதாம். இதில் மூவரும் காயமடைந்தனா். மாடசாமி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையிலும், முருகேஸ்வரி, விஜய் ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். அங்கு விஜய் சனிக்கிழமை இரவு இறந்தாா்.

Advertisement

இது தொடா்பாக சங்கரன்கோவில் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுரேஷ்கண்ணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments