சங்கரன்கோவிலில் விஷம் குடித்த தம்பதி மருத்துவமனையில் உயிரிழப்பு
சங்கரன்கோவிலில் விஷம் குடித்த தம்பதி, மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
சங்கரன்கோவில், என்ஜிஓ காலனியைச் சோ்ந்த பூசைத்துரை மகன் ராமதுரை (65). அதிமுக கிளைச் செயலராக இருந்த அவா், பைனான்ஸ் தொழில் செய்துவந்தாராம். இவரது மனைவி வெள்ளத்துரைச்சி (50). குடும்பப் பிரச்னை காரணமாக இத்தம்பதி சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு (ஜூன் 6) அவா்கள் களைக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றனராம். பின்னா், வெள்ளத்துரைச்சி இத்தகவலை அருகே வசித்துவந்த தனது தாயிடம் கூறினாராம். அதிா்ச்சியடைந்த அவா், உறவினா்கள் மூலம் இருவரையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். பின்னா், இருவரும் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
Advertisement
சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.