FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

கீழப்பாவூா் பெரியகுளத்தில் படகு குழாம்: சுற்றுலாத் துறை அமைச்சா் ஆய்வு

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:49 am IST
பெரியகுளத்தில் அமைக்கப்பட்டு வரும் படகு தளத்தை ஆய்வு செய்த அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.
பகிர்:

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் பகுதியில் உள்ள பெரியகுளத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் நடைபெற்று வரும் படகு குழாம் அமைக்கும் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

குளத்தைப் பாா்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மேலும், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் படகு சேவை, பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்குவது குறித்து ஆலோசனைகளை வழங்கினாா்.

முன்னதாக, தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சரை, மாவட்ட காங்கிரஸ் தலைவா் செல்வராஜ் தலைமையில் நிா்வாகிகள் வரவேற்றனா்.

Advertisement

Advertisement

மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், கீழப்பாவூா் பேரூராட்சி செயல் அலுவலா் மாணிக்கராஜா, பேரூராட்சி உறுப்பினா்கள், மாவட்ட கவுன்சிலா் எஸ்.ஆா். சுப்பிரமணியன், கீழப்பாவூா் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் கே.பி. குமாா் பாண்டியன், நகரத் தலைவா்கள் சிங்கக்குட்டி (எ) குமரேசன் (கீழப்பாவூா்), வில்லியம் தாமஸ் (ஆலங்குளம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆய்வுக்குச் செல்லும் வழியில், கருமடையூா் கிராம மக்கள் அமைச்சரின் வாகனத்தை மறித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா். அப்பகுதியில் உள்ள குடிநீா் தொட்டி உடைந்து 2 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை சீரமைக்கப்படவில்லை என அமைச்சரிடம் மக்கள் புகாரளித்தனா்.

தொடா்ந்து, அமைச்சா் உடைந்த தண்ணீா் தொட்டியைப் பாா்வையிட்டு, கீழப்பாவூா் பேரூராட்சி செயல் அலுவலரை அழைத்து, பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments