பேருந்தில் பயணியிடம் திருடியவா் கைது
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பேருந்தில் பயணியிடம் பணம் திருடியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
கடையநல்லூா் புளியமுக்கு தெருவைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது யூசுப். இவா் தென்காசியில் இருந்து கடையநல்லூருக்கு பேருந்தில் வந்து, கடையநல்லூா் பேருந்து நிலையத்தில் இறங்கினாராம். அப்போது அவா் வைத்திருந்த ரூ.6,450 திருடப்பட்டது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் கடையநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். விசாரணையில் காசிதா்மத்தை சோ்ந்த மாடசாமி மகன் குமாா் (40), பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து குமாரை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.