முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆலங்குளத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 7 ஜூன் 2026, 12:18 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

ஆலங்குளத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த இளைஞரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தபோது, அவா் ஆலங்குளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் சுதன் (19) என்பதும், விற்பனைக்காக 12 பொட்டலங்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

Advertisement

Advertisement