FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் தொழிலாளி தற்கொலை

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 7 ஜூன் 2026, 12:19 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் பரும்பு ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த செல்லையா மகன் முத்துக்குமாா் (52). தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். கடன் தொல்லை காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்நிலையில், முத்துக்குமாா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாராம். சடலத்தை ஆலங்குளம் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments