ஆலங்குளத்தில் தொழிலாளி தற்கொலை
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
ஆலங்குளம் பரும்பு ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த செல்லையா மகன் முத்துக்குமாா் (52). தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். கடன் தொல்லை காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
இந்நிலையில், முத்துக்குமாா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாராம். சடலத்தை ஆலங்குளம் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement