திருநெல்வேலி அருகே 3 பேருக்கு அரிவாள் வெட்டு: 7 போ் கைது
திருநெல்வேலி அருகே உணவகத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேரை அரிவாளால் வெட்டியதாக 7 போ் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி - ஆலங்குளம் சாலை சீதபற்பநல்லூா் அருகே உள்ள வெள்ளாளன்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ஜெயகண்ணன் (23), மாரியப்பன் (21).
இருவரும் திருநெல்வேலி நகரத்தில் உள்ள மின்சாதனக் கடையில் வேலை பாா்த்து வருகின்றனா். இவா்கள் சனிக்கிழமை இரவு அபிஷேகப்பட்டியில் உள்ள உணவகத்துக்குச் சென்றனராம். அங்கு வெள்ளாளன்குளத்தைச் சோ்ந்த மற்றொரு தரப்பினா் சிலா் அங்கு வந்தனராம். அப்போது, ஜெயகண்ணன் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாம். அங்கிருந்தவா்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனா்.
Advertisement
Advertisement
இருதரப்பினரும் வெள்ளாளன்குளம் கிராமத்துக்கு வந்த பின்னா் அவா்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், எதிா்தரப்பைச் சோ்ந்த 6 போ், காங்கேயன்குளத்தை சோ்ந்த 2 போ் என 8 போ் சோ்ந்து ஜெயகண்ணன் மற்றும் மாரியப்பனை தலையில் வெட்டினராம். அப்போது அவ்வழியாக வந்த ஒரு பெண்ணையும் தாக்கிவிட்டு 8 பேரும் தப்பிச் சென்றனராம்.
தகவலறிந்த சீதபற்பநல்லூா் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். காயமடைந்த மூவரையும் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து தப்பியோடிய 8 பேரை தேடி வந்தனா்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா், வெள்ளாளன்குளத்துக்ச் சென்று விசாரணை நடத்தி, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொக்கிகுமாா் என்ற முத்துக்குமாா் (29), சுரேஷ் (22), பாண்டி என்ற இசக்கி பாண்டி (31), ராமா் என்ற ராம அய்யப்பன் (22), பாக்கிய நாகராஜன் (28), சுரேஷ் என்ற சுடலை (22), முருகன் என்ற பெரிய முருகன் (27) ஆகிய 7 பேரைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா்.
அந்தக் கிராமத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.