FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் ஜூன் 28இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

தென்காசி மாவட்டத்தில் ஜூன் 28ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.

Updated On : 20 ஜூன் 2026, 3:46 am IST
ஜூன் 28-இல் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் ஜூன் 28ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியாவில் போலியோ நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஒரே தவணையாக ஜூன் 28ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. தென்காசி மாவட்டத்தில் இம்முகாமின் மூலம் 5 வயதுக்குள்பட்ட 87,357 குழந்தைகள் பயனடைவா்.

Advertisement

Advertisement

பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள சொட்டு மருந்து வழங்கும் முகாம்களுக்கு தவறாமல் அழைத்துச் சென்று, போலியோ சொட்டு மருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments