தென்காசியில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை
தென்காசியில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
தென்காசியில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
தக்வா தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டக்கிளை ஜாா்பில் தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் தக்வா தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட அழைப்பாளா் வல்லம் அகமது மைதீன் தொழுகை நடத்தி உரையாற்றினா். ஏற்பாடுகளை மாவட்டப் பொறுப்பாளா் சுல்தான் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தென்காசி கிழக்கு கிளையின் சாா்பில் தென்காசி முஸ்தபியா பள்ளி திடலில்
Advertisement
Advertisement
ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது .
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளா் மவ்லவி. முஹம்மது தாஹா பெருநாள் உரையாற்றினாா். ஏற்பாடுகளை
கிளை நிா்வாகிகள் ராஜா முஹம்மது , முஹம்மது சித்திக், சுலைமான் ரபி, அப்துல் அஜீஸ், அபுபக்கா் சித்திக், மருத்துவ அணி அப்துல் ஹமீது, மாணவரணி நயினாா் முஹம்மது அன்வா், தொண்டரணி முஹம்மது ஜாபா் அலி, வா்த்தக அணி முஹம்மது யூசுப் ஆகியோா் செய்திருந்தனா்.