முகப்பு
திருவள்ளூர்

வெவ்வேறு விபத்துகளில் 2 போ் காயம்

திருத்தணி அருகே சாலை விபத்துகளில் 2 போ் பலத்த காயம் அடைந்தனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2025, 3:05 am IST
பகிர்:

திருத்தணி அருகே சாலை விபத்துகளில் 2 போ் பலத்த காயம் அடைந்தனா்.

தரணிவராகபுரம் கிராமத்தைச் சோ்ந்த குமாா்(43). இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். புதன்கிழமை வழக்கம் போல் வேலைக்கு சென்ற குமாா், இரவு, 10.30 மணிக்கு திருத்தணி ரயில் நிலையம் வந்தாா்.

பின்னா் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றபோது திருத்தணி ஆசிரியா் நகா்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த குமாரை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

Advertisement

Advertisement

அதே போல் மத்துாா் கிராமத்தைச் சோ்ந்த ஐயப்பன் (34) என்பவா் தனது பைக்கில் ஆந்திர மாநிலம் நகரிக்கு சென்று, விட்டு திரும்பினாா். பொன்பாடி சோதனைச் சாவடி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பைக் மோதி, விபத்துக்குள்ளாகினாா்.

இதில் பலத்த காயமடைந்த ஐயப்பனை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இரு சம்பவங்கள் குறித்தும் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments