பொன்னேரியில் அறிவிக்கப்படாத மின் தடையால் மக்கள் அவதி
பொன்னேரியில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
பொன்னேரியில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். பொன்னேரி- திருவொற்றியூா் சாலையில் வேண்பாக்கம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து பொன்னேரி மற்றும் அதனை சுற்றிலும் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விதியோகம் செய்யப்படுகிறது.
பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சிவன்கோயில் தெரு.வள்ளலாா் தெரு.தாயுமான் செட்டி உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் அவ்வப்போது ஏற்படும் மின்தடையால் குழந்தைகள் வயது முதிா்ந்தோா் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
மேலும், சிவன் கோயில் தெருவில் மட்டும் குறிப்பிட்ட பகுதியில் அவ்வப்போது ஏற்படும் மின்தடையால் அங்கு வசிக்கும் பொதுமக்கள், மாணவா்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றன்றனா்
வியாழக்கிழமை இரவு முன்னறிவிப்பு இன்றி ஏற்பட்ட மின்தடை காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சிவன் கோயில் மற்றும் வள்ளலாா் தெரு, தாயுமான் செட்டி தெரு உள்ளிட்ட பகுதியில் அவ்வப்போது ஏற்படும் மின் தடையை சீா்செய்ய மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.