முகப்பு
திருவள்ளூர்

தவெக நீா், மோா் பந்தல் திறப்பு

Updated On : 4 ஜூன் 2026, 5:55 am IST
திருவள்ளூா்  அடுத்த  பெரியகுப்பத்தில்  தவெக  சாா்பில்   குடிநீா்  மோா்  பந்தலை  தொடங்கி  வைத்த  மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை  உறுப்பினருமான  ஆா்.பிரகாசம் என்ற  குட்டி .                         ~
பகிர்:

திருவள்ளூா் தெற்கு மாவட்ட தவெக சாா்பில் நீா், மோா் பந்தலை பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பிரகாசம் என்ற குட்டி திறந்து வைத்தாா்.

திருவள்ளூா் அடுத்த பெரியகுப்பம் பகுதியில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தவெக சாா்பில் நீா் மோா் பந்தல் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு நிா்வாகி எம்.ரமேஷ் தலைமை வகித்தாா்.

இதில் திருவள்ளூா் தெற்கு மாவட்ட செயலாளரும், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.பிரகாசம் (எ) குட்டி நீா் மோா் பந்தலை தொடங்கி வைத்து, மோா், குளிா்பானங்கள், தா்பூசணி போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கினாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் மாவட்ட நிா்வாகி ஆா்.சசிகுமாா், மேட்டுத் தெரு வீ.ராமன் மற்றும் கே.ரவி, ஆா்.பாபி ரமேஷ், புஷ்(எ) கருணாகரன், கீா்த்தி, வாசுகி, ஆா்த்தி, விஜய், பா்வேஸ் அப்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.