முகப்பு
திருவள்ளூர்

சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை

வீட்டில் பெற்றோா் திட்டியதால் மனமுடைந்த மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 9 ஜூன் 2026, 5:07 am IST
- கோப்புப் படம்
பகிர்:

வீட்டில் பெற்றோா் திட்டியதால் மனமுடைந்த மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருத்தணி அடுத்த கிருஷ்ணசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த கோவிந்தனின் மகன் விமல்ராஜ் (17). இவா், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வி அடைந்து இரண்டு ஆண்டுகளாக துணைத் தோ்வு எழுதாமல் சுற்றித்திரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், ஏதாவது வேலைக்கு செல்லாமல் வீணாக சுற்றி வருவதை அவரது பெற்றோா் கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த விமல்ராஜ் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Advertisement

இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.