வணிகம்

3வது நாளாக சரிவில் முடிந்த வணிகம்! 18 நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி!

வாரத்தின் முதல் நாளான இன்று (அக். 16) இந்திய பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவடைந்தது.

DIN


வாரத்தின் முதல் நாளான இன்று (அக். 16) இந்திய பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவடைந்தது. இதன்மூலம் கடந்த 3 வணிக நாள்களாக பங்குச்சந்தை சரிவுடன் முடிவது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115.81 புள்ளிகள் சரிந்து 66,166.93 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. இது 0.17 சதவிகிதம் சரிவாகும். 

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 19.30 புள்ளிகள் சரிந்து 19,731.75 புள்ளிகளாக வணிகம் நிறைவடைந்தது. இது 0.098 சதவிகிதம் சரிவாகும். 

பங்குச்சந்தை குறியீட்டிலுள்ள 30 நிறுவனங்களில் 18 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. அதிகபட்சமாக டிசிஎஸ் 1.29 சதவிகிதம் சரிந்தது. அதற்கு அடுத்தபடியாக இந்தஸ்ந்த், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT