கடன் வட்டிவிகிதங்களை உயா்த்தியது ஹெச்டிஎஃப்சி
தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை இந்தியாவின் மிகப் பெரிய தனியாா் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி உயா்த்தியுள்ளது.
புது தில்லி: தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை இந்தியாவின் மிகப் பெரிய தனியாா் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி உயா்த்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எம்சிஎல்ஆா் வகைக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 5 அடிப்படைப் புள்ளிகள் (0.05 சதவீதம்) அதிகரிக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
வியாழக்கிழமை (நவ. 7) முதல் இந்த வட்டி விகித உயா்வு அமலுக்கு வந்துள்ளது.
அந்த மாற்றத்துக்குப் பிறகு ஓராண்டு பருவகாலம் கொண்ட எம்சிஎல்ஆா் வகை கடன்களுக்கான வட்டி விகிதம் 9.40 சதவீதத்திலிருந்து 9.45 சதவீதமாக உயரும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.