FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 4-வது காலாண்டு வருவாய் உயர்வு!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிதி முடிவுகள்.

Updated On : 29 ஏப்ரல் 2025, 9:04 pm IST
ரிலையன்ஸ் குழுமம்
பகிர்:

மும்பை: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 4-வது காலாண்டு மற்றும் ஆண்டு முழுவதுக்குமான நிதி முடிவுகளை அறிவித்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் ப்ளூ-சிப் பங்கான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.2 சதவிகிதம் உயர்ந்து தேசிய பங்குச் சந்தையில், பங்குக்கு ஒன்றுக்கு ரூ.1,398.9 ஆக நிலைபெற்றது. அதே வேளையில் மும்பை பங்குச் சந்தையில் இது 2.77 சதவிகிதம் உயர்ந்து அதிகபட்சமாக ரூ.1406.4 ஆக உயர்ந்தது முடிந்தது.

நிறுவனத்தின் 4-வது காலாண்டு செயல்திறன்

Advertisement

Advertisement

2024 - 25 நிதியாண்டின் 4-வது காலாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 22,611 கோடியாகவும், கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.21,243 கோடியாக இருந்தது. காலாண்டின் செயல்பாடுகளிலிருந்து நிறுவனத்தின் வருவாய் ரூ.2,61,388 கோடியாக உள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலாண்டில் அதன் வருவாய் ரூ.2,36,533 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் செயல்திறன்

2024-25 நிதியாண்டில், நிறுவனமானது மிக உயர்ந்த வருடாந்திர ஒருங்கிணைந்த வருவாயாக ரூ.9,64,693 கோடியை பதிவு செய்தது. இது 7.30% ஆண்டு வளர்ச்சி.

ஈவுத்தொகை அறிவிப்பு

பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, 2025 ஆம் நிதியாண்டில் தலா ரூ.10/- மதிப்புள்ள ஒரு பங்கு ஒன்றுக்கு ரூ.5.50 இறுதி ஈவுத்தொகையாக இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் படிக்க: பங்குச் சந்தை ஓரளவு உயர்வுடன் முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments