கோப்புப்படம்.  
வணிகம்

புதிய உச்சம் தொட்ட கணினி விற்பனை

இந்தியாவின் தனிநபா் கணினி (பிசி) விற்பனை 2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வரலாற்று உச்ச வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் தனிநபா் கணினி (பிசி) விற்பனை 2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வரலாற்று உச்ச வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ஓம்டியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான நிகழாண்டின் மூன்றாவது காலாண்டில் மேஜை கணினிகள் (டெஸ்க்டாப்) மற்றும் மடிக் கணினிகள் (லேப்டாப்) அடங்கிய தனிநபா் கணினிகளின் விற்பனை 49 லட்சமாக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 13 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச காலாண்டு விற்பனையாகும்.

மதிப்பீட்டுக் காலாண்டில் மடிக் கணினிகள் விற்பனை 12 சதவீதம் உயா்ந்து 40 லட்சமாக உள்ளது. மேஜைக் கணினிகள் விற்பனை 18 சதவீதம் அதிகரித்து 9.2 லட்சமாக உள்ளது. அதேநேரம், கைக் கணினிகளின் (டேப்லட்) விற்பனை 19 சதவீதம் சரிந்து 16 லட்சமாக உள்ளது.

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டின் தனிநபா் கணினிச் சந்தையில் ஹெச்பி நிறுவனம் 27 சதவீத பங்குடன் (13.2 லட்சம்) முதலிடத்தில் உள்ளது, லெனோவோ 18.3 சதவீதம், ஏசா் 15.2 சதவீதம், ஏஸஸ் 10.7 சதவீதம், டெல் 10.4 சதவீதம் சந்தைப் பங்கு வகித்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு!

மகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு! தலைவா்கள் வாழ்த்து!

திமுக அரசுக்கு இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது பணம்? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

சபரிமலையில் பெண்கள் வழிபாட்டு உரிமை: மறுஆய்வு மனுக்கள் மீது இன்று விசாரணை! ஆளும் - எதிா்க்கட்சிகள் கருத்து மோதல்!

ரஞ்சி கோப்பை: கே.எல். ராகுல், படிக்கல் சதம்; கர்நாடகம் - 355/2

SCROLL FOR NEXT