கார்வார் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி
கர்நாடகாவை சேர்ந்த தி கார்வார் நகர்ப்புற கூட்டுறவு வங்கியிடம் போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாததால் அதன் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
மும்பை: கர்நாடகாவை சேர்ந்த தி கார்வார் நகர்ப்புற கூட்டுறவு வங்கியிடம் போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாததால், அதன் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.
இதன் விளைவாக இன்று (ஜூலை 23) வணிகம் முடியும் தேதியிலிருந்து வங்கி வணிகத்தை மேற்கொள்வதை நிறுத்தியது.
கலைக்கப்பட்டவுடன், ஒவ்வொரு வைப்புத்தொகையாளரும் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திடமிருந்து ரூ.5 லட்சம் வரையிலான பண உச்சவரம்பு வரையிலான வைப்புத்தொகை காப்பீட்டு கோரிக்கை தொகையைப் பெற உரிமை பெறுவார்கள்.
Advertisement
Advertisement
வங்கி சமர்ப்பித்த தரவுகளின்படி, 92.9 சதவிகித வைப்புத்தொகையாளர்கள் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திடமிருந்து தங்கள் வைப்புத்தொகையின் முழுத் தொகையையும் பெற உரிமை பெறுவர் என்றது ரிசர்வ் வங்கி.
ஜூன் 30, 2025 நிலவரப்படி, மொத்த காப்பீட்டு வைப்புத்தொகைகளில் ரூ.37.79 கோடியை டிஐசிஜிசி ஏற்கனவே செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தங்கத்தை தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்ட வெள்ளி!
The Reserve Bank on Wednesday said it has cancelled the licence of Karnataka-based The Karwar Urban Co-operative Bank as it does not have adequate capital
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.