கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு!: ஆயில் இந்தியா
ஆயில் இந்தியா நிறுவனம் ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஜெய்ப்பூர்: அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்டவையால், ஆயில் இந்தியா நிறுவனம், ராஜஸ்தானின் தார் பாலைவனத்திலிருந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் ஆயில் இந்தியா ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஜோத்பூரிலிருந்து நாள் ஒன்றுக்கு 1,202 பீப்பாய்கள் என்ற சாதனை அளவிலான உற்பத்தி தற்போது எட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்குச் சொந்தமான ஆயில் இந்தியா, கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 705 பீப்பாய்களாக இருந்த உற்பத்தியை, தற்போதைய நிதியாண்டில் சுமார் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவதற்கும், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்குமான முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
Advertisement
Advertisement
ஜெய்சால்மரில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய், டேங்கர்கள் மூலம் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும், அங்கிருந்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் இயக்கப்படும் கோயலி சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய் வழியாக அனுப்பப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
2025-26 நிதியாண்டில், ஆயில் இந்தியாவின் ராஜஸ்தான் எண்ணெய் வயலில் செய்த அசாத்தியமான தொழில்நுட்ப முன்னேற்றங்களால், கடந்த ஆண்டு 32,787 மெட்ரிக் டன்களிலிருந்து அதிகரித்து 43,773 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உற்பத்தியைப் பதிவு செய்தது.
ஆயில் இந்தியா நிறுவனம் 2017 முதல் பகேவாலா எண்ணெய் வயலிலிருந்து கணிசமான கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து வருகிறது.
Amid heightened geopolitical tensions and uncertainty in global oil markets, Oil India Ltd has significantly ramped up crude production from Rajasthan's Thar desert
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.