FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

மரிகோ முதல் காலாண்டு லாபம் 27% அதிகரிப்பு!

மரிகோ லிமிடெட், ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 27% அதிகரித்து ரூ. 652 கோடியாக உள்ளது.

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 8:11 pm IST
மரிகோ லிமிடெட்
பகிர்:

புதுதில்லி: நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான மரிகோ லிமிடெட், 2027 நிதியாண்டின் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 27 சதவீதம் அதிகரித்து ரூ. 652 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.

கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் நிறுவனம் ரூ. 513 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது. 2027 நிதியாண்டின் ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 22.85 சதவீதம் அதிகரித்து ரூ. 3,957 கோடியாக உள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ. 3,221 கோடியாக இருந்தது.

சஃபோலா, பாராசூட், லிவோன் ஆகிய பிராண்டுகளைக் கொண்ட இந்நிறுவனம், ஜூன் காலாண்டில், வலுவான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

2027 நிதியாண்டின் ஜூன் வரையான காலாண்டில் மரிகோ நிறுவனத்தின் மொத்தச் செலவுகள் 22.66 சதவீதம் அதிகரித்து ரூ. 3,215 கோடியாக இருந்தது. அதே வேளையில், 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டுச் சந்தையிலிருந்து மரிகோ ஈட்டிய வருவாய் 21 சதவீதம் அதிகரித்து ரூ. 3,003 கோடியாக உள்ளது.

ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் சர்வதேச வருவாய் 29.26 சதவீதம் அதிகரித்து ரூ. 954 கோடியாக இருந்தது. இதற்கிடையில், இதர வருமானத்தையும் உள்ளடக்கிய நிறுவனத்தின் மொத்த வருமானம் 22.21 சதவீதம் அதிகரித்து ரூ. 4,005 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Marico Ltd reported a 27 per cent rise in consolidated net profit of FY27.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments