ஆப்பிள் ஐபோன் 17 விலை உயர்கிறது? ஐபோன் 18 வெளியீடு காரணமா?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 விலை உயரவுள்ளது; இதற்கான காரணம் குறித்து...
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 விலை உயரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஐபோன் 18 அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், விலை குறைப்புக்கு பதிலாக முந்தைய மாடல் விலை அதிகரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
சீனாவைச் சேர்ந்த சமூக வலைதளமான வெய்போ, இன்று முதல், அதாவது ஆக. 10 ஆம் தேதி முதல் ஐபோன் 17 விலை உயரவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் விலை ஏற்றம் செய்யப்பட்டது. மேக், ஐபேட், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ், ஸ்டூடியோ டிஸ்பிளே போன்ற தயாரிப்புகளின் விலையில் மாற்றங்கள் இருந்தன. ஆனால், ஐபோன் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
அதிகப்படியான நினைவகம் மற்றும் சேமிப்பு செலவுகளுக்காக ஜூன் மாதம் முதல் இந்த விலை மாற்றம் அதிகமாக இருந்தது.
ஐபோன் 17 விலையேற்றம் ஏன்?
ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதத்தில் ஐபோன் 18, ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ், ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக் கூடிய முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.
இதனைத் தொடர்ந்து ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18இ ஆகிய ஸ்மார்ட்போன்களும் 2027 கோடையையொட்டி அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும் ஐபோன் 17 ஸ்மார்ட்போன் அதிக எண்ணிக்கையில் இருப்பு உள்ளதால் அடுத்த ஆண்டு முழுவதுமே ஐபோன் 17 விற்பனை தொடரும் எனத் தெரிகிறது. இதன் காரணமாக ஐபோன் 18 வெளியீட்டையொட்டி சிறிது காலத்துக்கு விலை மாறுபாடு செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்களின் விலை
ஐபோன் 17 இ - ரூ. 64,900
ஐபோன் 17 - ரூ. 82,900
ஐபோன் ஏர் - ரூ. 1,19,900
ஐபோன் 17 ப்ரோ - ரூ. 1,34,900
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் - ரூ. 1,49,900
iPhone 17 price may increase next week Is the iPhone 18 launch the reason?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.