ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 94.93! 81 காசுகள் உயர்வு!
இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 81 காசுகள் உயர்ந்து ரூ. 94.93 ஆக நிலைபெற்றது.
மும்பை: ரிசர்வ் வங்கி, அந்நிய மூலதனத்தை ஊக்குவிக்கும் வகையில், பல நடவடிக்கைகளை அறிவித்ததைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 81 காசுகள் உயர்ந்து ரூ. 94.93 ஆக நிலைபெற்றது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை, எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி உறுதியளித்ததைத் தொடர்ந்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாக அதிகரித்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேற்கு ஆசிய நெருக்கடியால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விலை உயர்வு மற்றும் அதன் விநியோகத் தடைகளின் தாக்கத்தை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி, இன்று எதிர்பார்த்தபடியே தொடர்ந்து இரண்டாவது முறையாக வட்டி விகிதங்களை மாற்றமின்றி வைத்திருந்தது.
Advertisement
Advertisement
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.72 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகான வர்த்தகத்தின் போது, அதிகபட்சமாக ரூ. 94.89 என்ற அளவை எட்டியது. வர்த்தகத்தின் இறுதியில், முந்தைய நாள் முடிவிலிருந்து 81 காசுகள் உயர்ந்து ரூ. 94.93 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.
நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 95.74 ஆக நிலைபெற்றிருந்தது.