ஹூண்டாய் மோட்டார்ஸ் 4வது காலாண்டு லாபம் 22% சரிவு!
நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் 22.22 சதவீதம் சரிந்து ரூ. 1,255.63 கோடியாகப் இருப்பதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தெரிவித்தது.
புதுதில்லி: தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ், அதன் அதிகரித்த செலவினங்களின் உள்ளிட்டவையால், மார்ச் வரையான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் 22.22 சதவீதம் சரிந்து ரூ. 1,255.63 கோடியாகப் இருப்பதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் இன்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், நிறுவனம் ரூ. 1,614.35 கோடி அளவிற்கு, ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் ஈட்டியிருப்பதாக, ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தெரிவித்தது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 17,940.28 கோடியாக இருந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்தச் செயல்பாட்டு வருவாய், தற்போது ரூ. 18,916.15 கோடியாக இருப்பதாக நிறுவனம் குறிப்பிட்டது. மேலும், இதே காலகட்டத்தில் ரூ. 15,974.46 கோடியாக இருந்த மொத்தச் செலவினங்கள், தற்போது ரூ. 17,571.66 கோடியாக உயர்ந்துள்ளதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்தது.
Advertisement
Advertisement
2025-26 நிதியாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 5,431.52 கோடியாக இருந்தது. இதுவே, 2024-25 நிதியாண்டில் பதிவான ரூ. 5,640.21 கோடியுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும்.
2025-26 நிதியாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்தச் செயல்பாட்டு வருவாய் ரூ. 70,763.33 கோடியாக இருந்தது. இதுவே, 2024-25 நிதியாண்டில் பதிவான ரூ. 69,192.89 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும்.
2025-26 நிதியாண்டிற்காக, தலா ரூ. 10 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் ரூ. 21 ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
Hyundai Motor India Ltd reported a 22.22 per cent decline in consolidated profit after tax at Rs 1,255.63 crore in the March quarter.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.