லென்ஸ்கார்ட் 4வது காலாண்டு லாபம் 7.5% சரிவு!
ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 7.5 சதவீதம் குறைந்து ரூ. 203.6 கோடியாக இருப்பதாக லென்ஸ்கார்ட் அறிவித்தது.
புதுதில்லி: இந்தியாவில் புகழ்பெற்ற கண் கண்ணாடி விற்பனை நிறுவனமாக லென்ஸ்கார்ட், மார்ச் 2026 உடன் முடிவடைந்த 4வது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 7.5 சதவீதம் குறைந்து ரூ. 203.6 கோடியாகப் இருப்பதாக இன்று அறிவித்தது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், நிறுவனம் ரூ. 220.1 கோடி ஈட்டியது.
மார்ச் வரையான காலாண்டில், செயல்பாடுகள் வாயிலாக கிடைத்த வருவாய், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 1,728 கோடியிலிருந்து 45.62 சதவீதம் உயர்ந்து, சுமார் ரூ. 2,516 கோடியாக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
பங்குதாரர்களுக்கு நிறுவனம் எழுதிய கடிதம் ஒன்றில், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், கண்ணாடி விற்பனை எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 25.2 சதவீதம் வளர்ச்சி கண்டு 97 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மதிப்பாய்வுக்கு உட்பட்ட இக்காலாண்டில், இந்தியாவில் லென்ஸ்கார்ட் சராசரி விற்பனை விலை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 15.9 சதவீதம் உயர்ந்து ரூ. 1,865ஐ எட்டியுள்ளது.
சர்வதேசப் பிரிவிலிருந்து கிடைத்த வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 35.4 சதவீதம் உயர்ந்து ரூ. 1,054 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
2025-26 நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 297.3 கோடியிலிருந்து சுமார் 68 சதவீதம் உயர்ந்து ரூ. 501 கோடியாக அதிகரித்துள்ளது. செயல்பாடுகள் வாயிலான வருவாயும் ஆண்டுக்கு ஆண்டு 32 சதவீதம் அதிகரித்து ரூ. 8,814 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் 282 புதிய கடையை திறந்த நிலையில், 2026 நிதியாண்டில் கூடுதலாக 542 புதிய கடைகளை லென்ஸ்கார்ட் திறந்துள்ளது.
Lenskart reported a 7.5 per cent year-on-year decline in consolidated profit after tax to Rs 203.6 crore in the fourth quarter ended March 2026.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.