FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சைவ வகைகள்

வாழைக்காய் கொத்துக்கடலை புளிக் கூட்டு

Updated On : 24 மார்ச் 2017, 12:00 am IST
பகிர்:

(பூண்டு மற்றும் வெங்காயம் சேர்க்காதது)

தேவையானவை:
வாழைக்காய் - 1
கெட்டியாக கரைத்த
புளி கரைசல் - ஒன்றரை கிண்ணம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
கொத்துமல்லித் தழை - ஒரு பிடி
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடலை எண்ணெய் - 2 தேக்கரண்டி

தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
கறுப்பு கொத்துக்கடலை - 2 கைப்பிடி
(முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் காலை குக்கரில் சிறிது உப்பு சேர்த்து 5 விசில்விட்டு வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.)

வறுத்துப் பொடிக்க:
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
தனியா - 3 தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
தேங்காய் - தேவைப்பட்டால் சேர்க்கலாம்.

செய்முறை:

வாழைக்காயைப் பொடியாக நறுக்கி 2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து அத்துடன் சிறிது மோர் சேர்த்து அரைப்பதமாக வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.  கறுப்பு கொத்துக் கடலையையும் குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து பிறகு வேகவைத்த வாழைக்காய் மற்றும் கொத்துக் கடலையை அதனுடன் சேர்த்து வதக்கி புளிக் கரைசல் சேர்க்கவும். பச்சை வாசனை போக 5-7 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக, வறுத்து அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து ஒரு கொதி விடவும். பின்னர், 1 தேக்கரண்டி தனியாத் தூள், 1 தேக்கரண்டி தேங்காய்
எண்ணெய், மல்லித் தழை தூவி அடுப்பை அணைக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments