யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை எத்தனை முறை எழுதலாம்? வயது வரம்பு என்ன?
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வை எத்தனை முறை எழுதலாம், வயது வரம்பு என்ன என்பது தொடர்பாக...
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தரப்பில் ஆண்டுதோறும் பல்வேறு பணிகளுக்காக சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது.
அதன் படி, இந்த ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டில் 933 பணியிடங்கள், இந்தத் தோ்வு மூலம் நிரப்பப்படவுள்ளது. இதில் 33 பணியிடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத் தோ்வு மே மாதம் 24-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் ஒருவர் எத்தனை முறை தேர்வை எழுதலாம், அதற்கான வயது வரம்பு குறித்து பின்வருமாறு காணலாம்.
Advertisement
Advertisement
சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் தகுதியுள்ள தேர்வர்கள் ஒவ்வொருவரும் 6 முறை இந்தத் தேர்வினை எழுதலாம். இருப்பினும், எஸ்சி/எஸ்டி/ஓபிசி (SC/ST/OBC) பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு (PwBD) தேர்வு எழுதுவதில் வயது வரம்பு தளர்வுகள் உள்ளன.
வயது வரம்பு தளர்வு விவரம்
பொதுவாக சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதற்கு ஒருவருக்கு குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 வயது வரை எழுதலாம். இருப்பினும், ஒவ்வொரு பிரிவினருக்கும் வயது வரம்பு தளர்வுகள் உள்ளன.
எஸ்சி/எஸ்டி (SC/ST): வயது வரம்பு முடியும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வெழுதலாம். (32 + 5 = 37 வயது வரை)
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC): 9 முயற்சிகள். (32 + 3 = 35 வயது வரை)
மாற்றுத்திறனாளிகள் (PwBD): GL/EWS/OBC பிரிவினருக்கு 9 முயற்சிகள்; (32 + 10 = 42 வயது வரை)
மாற்றுத்திறனாளிகள் (PwBD): எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினர் வயது வரம்பு முடியும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வெழுதலாம். (32 + 15 = 47 வயது வரை)
Regarding how many times one can appear for the Civil Services Examination conducted by the Central Public Service Commission and what is the age limit...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.