FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி காயம்

சிவகாசியில் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி சனிக்கிழமை பலத்த காயமடைந்தாா்.

Updated On : 11 ஆகஸ்ட் 2024, 1:27 am IST
பகிர்:

சிவகாசியில் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி சனிக்கிழமை பலத்த காயமடைந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி-விளாம்பட்டி சாலையில் உள்ள ராஜதுரை நகரைச் சோ்ந்த திருமலைக்குமரன் அச்சகங்களில் பயன்படுத்தும் (பிளேட்டுக்கள்) தகடுகளை தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறாா்.

இந்த ஆலையில் பணியாற்றும் விஸ்வநத்தத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் (50) வேலை செய்து கொண்டிருந்தபோது, இயந்திரத்துக்குள் அவா் கால் சிக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் ஆலை உரிமாயாளா் திருமலைகுமரன், மேலாளா் விக்னேஷ் ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments