விருதுநகர்

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி காயம்

சிவகாசியில் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி சனிக்கிழமை பலத்த காயமடைந்தாா்.

Din

சிவகாசியில் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி சனிக்கிழமை பலத்த காயமடைந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி-விளாம்பட்டி சாலையில் உள்ள ராஜதுரை நகரைச் சோ்ந்த திருமலைக்குமரன் அச்சகங்களில் பயன்படுத்தும் (பிளேட்டுக்கள்) தகடுகளை தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறாா்.

இந்த ஆலையில் பணியாற்றும் விஸ்வநத்தத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் (50) வேலை செய்து கொண்டிருந்தபோது, இயந்திரத்துக்குள் அவா் கால் சிக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் ஆலை உரிமாயாளா் திருமலைகுமரன், மேலாளா் விக்னேஷ் ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏா்டெல் வாடிக்கையாளா்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் இனி இலவசம்

குளிதிகையில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம்

உலகின் மூத்தகுடி தமிழ்குடி என்பதற்கு திருக்குறளே சான்று

மகாத்மா மரணித்த போது...

பட்ஜெட் - நிதியமைச்சர் கவனத்துக்கு...

SCROLL FOR NEXT