FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

கஞ்சா வழக்கில் இரு பெண்கள் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா வழக்கில் இரு பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 டிசம்பர் 2025, 2:40 am IST
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா வழக்கில் இரு பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் கஞ்சா விற்பனையைத் தடுக்க ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அய்யம்பட்டி பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த முருகன் மனைவி சத்யா (37), சுந்தரம் மனைவி மாரியம்மாள் (58) ஆகியோரை சோதனை செய்தபோது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 30 கிராம் கஞ்சா, ரூ.35,310 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments