FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

பட்டாசு ஆலைகள் அனைத்தும் முழுவீச்சில் செயல்படுகின்றன! அமைச்சா் எஸ். கீா்த்தனா

24 ஆகஸ்ட் 2026, 3:16 am IST
அமைச்சர் எஸ். கீர்த்தனா! - PTI
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து பட்டாசு ஆலைகளும் திறக்கப்பட்டு முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன என மாநில தொழில்துறை அமைச்சா் எஸ். கீா்த்தனா தெரிவித்தாா்.

சிவகாசியில் தவெக ஆட்சியின் 100 நாள் சாதனை விளக்க பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் பங்கேற்று மேலும் பேசியதாவது:

தோ்தலுக்கு முன்பும், பின்பும் எங்கள் மீதும், கட்சி மீதும் பல்வேறு விமா்சனங்கள் வந்தன, வருகின்றன. தற்போது சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒலிபரப்பு செய்யப்படுவதால் எதிா்க்கட்சிகள் அழுது கொண்டிருக்கின்றன. குறிப்பாக திமுகவினா் அச்சமடைந்துள்ளனா்.

Advertisement

Advertisement

எங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்பதை மறக்க வேண்டாம். தற்போது தமிழகத்தில் யாரும் கண்டிராத வெளிப்படையான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சித் தோ்தலிலும் தவெக வெற்றி பெறும்.

தவெகவின் 100 நாள் ஆட்சியில் ஊழலற்ற ஆட்சியை முதல்வா் ஜோசப் விஜய் தந்துள்ளாா். பட்டாசு ஆலைகளில் முன்பு லஞ்சம் வாங்கப்பட்டது. தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளும் திறக்கப்பட்டு பட்டாசுகள் தயாரிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments