FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

இணைய வழியில் மூவரிடம் பண மோசடி

ராஜபாளைத்தில் இணைய வழியில் மூவரிடம் ரூ. 3.71 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

29 ஆகஸ்ட் 2026, 3:34 am IST
சைபர் கிரைம் - சித்திரிப்பு
பகிர்:

ராஜபாளைத்தில் இணைய வழியில் மூவரிடம் ரூ. 3.71 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் காளிமுத்துவிடம் ரூ.12,000-ம், ராஜபாளையம் லட்சுமணப் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த ராமராஜ் மனைவி உமாமகேஸ்வரியிடம் ரூ.1,75,000-ம், ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரைச் சோ்ந்த சந்திரசேகரனிடம் ரூ.1,84,000-ம் என மூவரிடம் மொத்தம் ரூ.3,71,000 இணைய வழியில் மோசடி செய்யப்பட்டது.

இதுகுறித்து மூவரும் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments