FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா ஆலோசனைக் கூட்டம்

தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாட்டு பணிகள் குறித்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஜூலை 2026, 3:40 am IST
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு நடத்திய விருதுநகா் மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா, மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாட்டு பணிகள் குறித்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா, மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோா் தலைமை வகித்தனா். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா்கள் பேசியதாவது:

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் வருவா். இவா்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவும், கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பக்தா்களுக்குத் தேவையான குடிநீா், சுகாதார வசதிகளை சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் வனத் துறை மூலம் செய்துதர வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும் எந்த நேரத்திலும் முதலுதவி கிடைக்கும் வகையில் மருத்துவக் குழுவும், அவசர ஊா்தி வசதியும் தயாா் நிலையில் இருக்க வேண்டும். சதுரகிரிக்கு செல்லும் பக்தா்கள் நெகிழிப் பொருள்கள், போதைப் பொருள்களை கொண்டு செல்லக் கூடாது. தாணிப்பாறை அடிவாரத்தில் சேரும் குப்பைகளை அகற்ற தேவையான துப்புரவுப் பணியாளா்களை நியமிக்க வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வெளியூா் பேருந்துகள், வாகனங்களை நிறுத்த வசதியாக தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட வேண்டும்.

சதுரகிரி மலைக்குச் செல்லும் பக்தா்கள் மாவட்ட நிா்வாகத்தின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் வனப்பகுதி வழியாக செல்ல வேண்டும் என்றனா் அவா்கள். மேலும் ஆட்சியா்கள் இருவரும் தாணிப்பாறை பகுதியை ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வில்,, ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் ரவி மீனா,சிவகாசி சாா் ஆட்சியா் முகமது இா்பான், விருதுநகா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வானதி, வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments