FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, தருமபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 25 ஜூலை 2026, 7:24 am IST
ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு - கோப்புப்படம்
பகிர்:

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, தருமபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தருமபுரி அருகே இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதேபோல, இலக்கியம்பட்டி புற்றுமாரியம்மன் கோயில், குமாரசாமிப்பேட்டை அங்காளம்மன் கோயில், எஸ்.வி. சாலையில் உள்ள பூவாடைக்காரி அம்மன் கோயில், தருமபுரி உழவா் சந்தை எதிரில் அமைந்துள்ள அம்மன் கோயில் உள்பட பல்வேறு அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

இதேபோல, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அம்மன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments