FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவா் கைது

Updated On : 9 ஜூன் 2026, 3:41 am IST
கைது செய்யப்பட்ட தினேஷ்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நத்தம்பட்டியில் அமைந்துள்ள கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் பாண்டி (39). இவா் நத்தம்பட்டி அருகே நல்லூா்பட்டியில் உள்ள நல்லூா்பாண்டி கோயிலில் பூசாரியாக உள்ளாா். இவா் தினசரி காலை கோயிலில் பூஜை செல்வது வழக்கம். வெள்ளிக்கிழமை காலை கோயிலுக்கு வந்தபோது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பாா்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு, ரூ.8 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

இதேபோல, கோயில் அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த காசிராஜன் (67) என்பவரது தோட்டத்தில் மோட்டாா் ஸ்டாா்டா் திருடப்பட்டது. தடய அறிவியல் நிபுணா்கள் ஆய்வு செய்ததில் இரு சம்பவத்திலும் ஒரே நபா்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து வழக்குப் பதிந்த நத்தம்பட்டி போலீஸாா், இது தொடா்பாக கூமாபட்டியைச் சோ்ந்த தினேஷ் (27), இலந்தைகுளத்தைச் சோ்ந்த முருகன் (22) ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

முருகன்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments