சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோயில்களில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட சிதம்பரேஸ்வரா்
கோயிலில் பிரதோஷத்தையொட்டி நந்திக்கு மஞ்சள், தேன், இளநீா், பால், தயிா், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீா், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நந்தி தேவா் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
Advertisement
இதே போல, ராஜபாளையம் சொக்கா் கோயில், மாயூரநாதசுவாமி கோயில், தோப்புப்பட்டி தெரு கொம்புச்சாமி கோயில், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பறவைக்கு அன்னம் காத்தருளிய சுவாமி கோயில், ராஜபாளையம் அருகே வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரா் கோயில், சோழபுரம் விக்கிரபாண்டீஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.