முகப்பு
விருதுநகர்

இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சிவகாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகை.

Updated On : 29 மே 2026, 2:34 am IST
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சிவகாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகை.
பகிர்:

பக்ரீத் பண்டிகையையொட்டி, விருதுநகா் மாவட்டம், சிவகாசி, ராஜபாளையத்தில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் சிவகாசி மீரா உசேன் தெருவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை அமைப்பாளா் அப்துல்காதா் உஸ்மானி நடத்தி வைத்தாா். மாநிலச் செயலா் முஸ்தபா குத்பா பேருரை நிகழ்த்தினாா். இதில் மனித நேய மக்கள் கட்சியின் விருதுநகா் மாவட்டச் செயலாளா் முஹமது இஸ்மாயில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் முடங்கியாறு சாலை வழியாக இஸ்லாமியா்கள் ஊா்வலமாகச் சென்று ஈத்கா மைதான திடலை அடைந்தனா். அங்கு ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை நடத்தினா்.

Advertisement

Advertisement