முகப்பு
இணையம் ஸ்பெஷல்

யுபிஐ, கிரெடிட் கார்டு, வரி, பங்குச் சந்தை! ஜூன் 15 முதல் புதிய விதிமுறைகள்!

யுபிஐ, கிரெடிட் கார்டு, வரி, பங்குச் சந்தைகளில் ஜூன் 15 முதல் புதிய விதிமுறைகள் நடைமுறை.

Updated On : 12 ஜூன் 2026, 4:40 pm IST
கிரெடிட் கார்டு - ANI
பகிர்:

நிதி நடவக்கைகளில் ஜூன் 15ஆம் தேதி பல்வேறு புதிய மாற்றங்கள், விதிமுறைகள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன. இது வரி செலுத்துவோர், முதலீட்டாளர்கள், டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்வோர், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் போன்றவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பை உறுதி செய்தல், உள்நாட்டு உற்பத்தித் துறைக்கு ஒத்துழைப்பு போன்றவற்றுக்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மிக முக்கியமான விவரம் என்னவென்றால், முன்கூட்டியே செலுத்தும் வரியின் முதல் தவணைக்கான காலக்கெடுதான். அதாவது, ஜூன் 15-ஆம் தேதிக்குள், ரூ.10,000-க்கு மேல் மதிப்பிடப்பட்ட ஆண்டு வரி செலுத்துவோர், 2026-27-ஆம் நிதியாண்டிற்கான முன்கூட்டிய வரி (advance tax) செலுத்தும் முறையின் முதல் தவணையை செலுத்திவிட வேண்டும்.

Advertisement

Advertisement

இந்தத் தவணைத் தொகையானது, புதிய வருமான வரிச் சட்டம் 2025 மற்றும் வருமான வரி விதிகள் 2026-ன் கீழ் கணக்கிடப்படும். உரிய நேரத்தில் முன்கூட்டியே வரி தவணையை செலுத்தத் தவறினால், மாதத்திற்கு 1 சதவிகிதம் என்ற விகிதத்தில் வட்டி விதிக்கப்படலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.