முகப்பு
தினமணி கதிர்

ஓட்டுநர் இல்லாத கார்கள்!

ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார்கள் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் நகரில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளன.

Updated On : 8 நவம்பர் 2020, 6:00 am IST
பகிர்:

ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார்கள் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் நகரில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்ட் நகரில் உள்ளது தானியங்கி மென்பொருள் நிறுவனமான ஆக்ஸ்போட்டிகா. இந்த நிறுவனம் தானியங்கி கார்களைத் தயாரிப்பதில் முன்னோடி நிறுவனமாகும்.

ஓட்டுநர் இல்லாத கார்களை இயக்குவது குறித்து பிரிட்டன் அரசு ஆலோசனை செய்து, வரும் 2021 மார்ச் மாதத்தில் சாலைகளில் இயக்கலாம் என்று சட்டப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இந்த ஓட்டுநர் இல்லாத கார்கள் ஆக்ஸ்போர்ட் பார்க்வே ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஆக்ஸ்போர்ட் பிரதான ரயில்வே ஸ்டேஷன் வரை உள்ள 15 கி.மீ. வட்டவடிவச் சாலையில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இப்போது சோதனை செய்து பார்க்கப்பட்ட கார்கள் லெவல் 4 வகையிலான கார்களாகும். ஸீரோ லெவல் என்பது ஓட்டுநரால் இயக்கப்படும் கார். இந்த லெவல் 4 வகை கார் ஓட்டுநரில்லாத தானியங்கிகாராகும்.

சோதனை ஓட்டம் என்பதால் காரில் பாதுகாப்பிற்கான ஓட்டுநர் ஒருவர் இருந்திருக்கிறார். இந்தச் சோதனை இரவு, பகல் என நாள் முழுக்க நடந்திருக்கிறது. போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளிலும் நடத்தப்பட்டு இருக்கிறது. பல்வேறு தட்பவெப்பநிலை உள்ள காலங்களிலும் நடத்தப்பட்டு
இருக்கிறது.

இதற்கு முன் பல்வேறு நாடுகளில் இயக்கப்பட்ட தானியங்கிக் கார்கள், ஜிபிஎஸ் அடிப்படையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே சோதனை செய்து பார்க்கப்பட்டிருக்கின்றன. இப்போது ஆக்ஸ்போர்ட் நகரில் நடந்த சோதனை ஓட்டங்கள் ஜிபிஎஸ் அடிப்படையில் இயக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments