FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி...

'உங்களை மறுபடியும் செக் பண்ணணும்.''டாக்டர்.. எத்தனை முறை செக் பண்ணாலும் எங்கிட்ட பணம் இல்லை...'

Updated On : 28 ஜனவரி 2024, 12:00 am IST
பகிர்:

'உங்களை மறுபடியும் செக் பண்ணணும்.'
'டாக்டர்.. எத்தனை முறை செக் பண்ணாலும் எங்கிட்ட பணம் இல்லை...'

-ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.

'டாக்டர்.. என் மனைவிக்கு பி.பி.. சுகர் இருக்கு..'
'நியாயப்படி உங்களுக்குதானே வந்திருக்கணும்...'

Advertisement

Advertisement

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

'முதல் பல்லைப் பிடுங்கும்போது வலி தெரியும். அடுத்த பல்லை பிடுங்கும்போது வலி தெரியாது..'
'அப்ப அடுத்த பல்லை முதலில் பிடுங்குங்க டாக்டர்...'



'ஆபரேஷன் பண்ணின்டா நல்லா படிக்க முடியுமா?'
'முடியும்..'
'அப்போ பத்தாம் கிளாஸ் படிக்கிற என் பையனுக்கு ஆபரேஷன் பண்ணுங்க டாக்டர்..'

-தீபிகா சாரதி,
சென்னை.

'இவர் உண்மையிலே டாக்டர் தானாங்கிற சந்தேகமா இருக்கு..'
'ஏன் சார்...'
'நாங்க மெயின் ரோடில்தான் ஆஸ்பத்திரி வச்சிருக்கோம். எதற்காக பைபாஸ் சர்ஜரி பண்ணனும்னு கேக்கறாரு..'

-பண்ருட்டி பரமசிவம்

'ஒரு மாசத்துக்கு உன் மனைவியை சமைக்கச் சொல்லிட்டியா...? ஏன்..'
'டாக்டர் பத்திய சாப்பாடு சாப்பிட சொல்லியிருக்கிறாரு?'



'ஆபிஸில் நைட் டியூட்டி வாங்கிட்டியா.. ஏன்டா..'
'பகல் தூக்கம் உடம்புக்கு ஆகாதுன்னு டாக்டர் சொன்னாரு...?'

-அ.செந்தில்குமார்,
சூலூர்.


'அந்த டாக்டர் ரொம்ப மோசம்..'
'ஏன்...'
'பயங்கரமா தொண்டை கட்டியிருக்குன்னு போனா, ஆபரேஷன் பண்ணி எடுத்துடவான்னு கேக்கறாரு...'

-வி.ரேவதி,
தஞ்சை.


'வாங்க... வாங்க.. இன்னிக்கு வர்ற பேஷன்ட் நீங்கதான்...'
'டாக்டர் நான் வேணா கொஞ்ச நேரம் வெயிட் பண்ணட்டுமா.. பீஸூக்கு பணம் கொண்டு வரலை. கடன்தான் சொல்லணும்..'



'தொழிற்சாலைக்கு பக்கத்துல கிளினிக் திறக்காதேன்னு சொன்னனே கேட்டியா...?'
'பாரு. ஆபரேஷன் பண்ணும்போதெல்லாம் சங்கு ஊதுறாங்க..?'

-ஏ.எஸ்.கோவிந்தராஜன்,
சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments