முகப்பு
மகளிர்மணி

சின்னச் சின்ன அழகுக் குறிப்புகள்...

ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.

Updated On : 11 பிப்ரவரி 2021, 3:47 pm IST
பகிர்:

ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.

*முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.

*தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.

Advertisement

Advertisement

*துளசி இலை சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்.

*பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.

*பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர முகம் பளப்பளப்பாகும்.

*பாதாம் பருப்பு, பாலாடை, எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் பூசி வந்தால் வறண்ட சருமம் மாறும்.

*பாசிப் பருப்பை தேங்காய்ப் பாலில் ஊறவைத்து அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியைச் சேர்த்து முகத்தில் பூசி வந்தால் முகம் மென்மையாகக் காணப்படும்.

*கொத்துமல்லி மற்றும் மஞ்சளை சேர்த்து அரைத்து விழுதாக்கி  முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.

*ஒரு துண்டு வசம்பு எடுத்து திருநீற்றுப்பச்சிலை சாறு விட்டு அரைத்து தடவி வந்தால் முகப்பரு மறையும். சருமம் பளபளப்பாகும்.

*பூந்திக் கொட்டையைக் தண்ணீரில் ஊற வைத்து அந்த நுரையைக் கொண்டு நகங்களை கழுவினால் நகங்கள் பளிச் சென்றும் சுத்தமாகவும் காணப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments