கும்மாயம்
பச்சரிசி, உளுந்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியாக வறுத்து திரித்து மாவாக்க வேண்டும். மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கட்டி படாமல் நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
தேவையானவை:
பச்சரிசி - 400 கிராம்
உளுந்தம் பருப்பு - 800 கிராம்
முந்திரி பருப்பு - 25 கிராம்
உலர்ந்த திராட்சை - 10
கருப்பட்டி - 750 கிராம்
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
Advertisement
Advertisement
பச்சரிசி, உளுந்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியாக வறுத்து திரித்து மாவாக்க வேண்டும். மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கட்டி படாமல் நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். கருப்பட்டியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வடிகட்டி மாவோடு சேர்த்து கரைக்க வேண்டும். வாணலியில் கரைத்த மாவினை விட்டு அடிபிடிக்காமல் கிளற வேண்டும். இதில் நெய்யையும் சேர்த்து மாவு நன்றாக வெந்ததும் இறக்கி வைக்க வேண்டும். அதில் வறுத்த முந்திரிப் பருப்பையும், உலர்ந்த திராட்சையையும் சேர்த்தால் ருசி சூப்பராக இருக்கும். கருப்பட்டி உடலுக்கு நல்லது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.