முகப்பு
மகளிர்மணி

சுண்டல் டிப்ஸ்...

பச்சைப் பட்டாணி  சுண்டல், சென்னா சுண்டல் எது செய்தாலும்  அதனுடன்  குடமிளகாய் சேர்த்தால்  சுவையாக  இருக்கும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

பச்சைப் பட்டாணி சுண்டல், சென்னா சுண்டல் எது செய்தாலும் அதனுடன் குடமிளகாய் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

சுண்டல் தயாரானவுடன் புளியோதரைப் பொடியைத் தூவி தாளித்து இறக்கினால் காரசார சுண்டலாக இருக்கும்.

கடலை பருப்பு சுண்டலில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து கலந்தால் சுவையாக இருக்கும்.

எந்த ஒரு சுண்டலுக்கும் கடைசியில் வெள்ளை எள்ளையும், கறிவேப்பிலையையும் வறுத்து பொடித்துத் தூவினால் சுவையாக இருக்கும்.

பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு சுண்டலில் உலர் திராட்சையை நெய்யில் வறுத்து கலந்து கொடுத்தால் சுவையாக இருக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →