பனங்கிழங்கு புட்டு
பனங்கிழங்கு மேல் தோல் உரித்து நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பின்பு குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, பனங்கிழங்கு சேர்த்து வேக விடவும்.
தேவையானவை:
பனங்கிழங்கு - 4
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
வெல்ல பொடி - 50 கிராம்
ஏலக்காய், சுக்கு பொடி - சிறிது
நெய் - சிறிது
செய்முறை:
Advertisement
Advertisement
பனங்கிழங்கு மேல் தோல் உரித்து நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பின்பு குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, பனங்கிழங்கு சேர்த்து வேக விடவும். குக்கர் ஐந்து சத்தம் வந்த பின் இறக்கி இருபது நிமிடம் ஆற விடவும். பின் கிழங்கை வெளியே எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி நார் நீக்கி தனியே வைக்கவும். நறுக்கிய துண்டுகளை நன்கு காயவிடவும். இரண்டு நாள் காய்ந்த பின் இதனை மிக்ஸியில் இட்டு கொரகரப்பாக அரைக்கவும். இந்த பொடியுடன் ,வெல்ல பொடி, ஏலக்காய், சுக்கு பொடி நெய் சேர்த்து கிளறினால் பனங்கிழங்கு புட்டு ரெடி. இது ஒரு புதுமையான இனிப்பு அனைவரும் விரும்பி உண்பர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.