மகளிர்மணி

வாழைத் தண்டு காரப் பொரியல்

வாழைத்தண்டை மோரில் பத்து நிமிடம் போட்டு வைக்கவும். முதலில் வாழைத்தண்டை நார் எடுத்து பொடியாக அரிந்தவுடன் மோரில் போட வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

வாழைத் தண்டு- 1
மோர்- 100 கிராம்
மஞ்சள் பொடி- 1 மேசைக் கரண்டி
பெரிய வெங்காயம்-1
தக்காளி-1
மிளகாய்த் தூள்-2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
சோம்பு- கால் தேக்கரண்டி
தேங்காய்த் துருவல்- 1 மேசைக் கரண்டி
உளுத்தம் பருப்பு- 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி- 1 ஆர்க்கு

செய்முறை:

வாழைத்தண்டை மோரில் பத்து நிமிடம் போட்டு வைக்கவும். முதலில் வாழைத்தண்டை நார் எடுத்து பொடியாக அரிந்தவுடன் மோரில் போட வேண்டும். கால் மணி நேரம் கழித்து மோரை வடிகட்டி, தண்டை மட்டும் எடுக்க வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, வாழைத் தண்டைப் போட்டு வதக்கி,  ஐந்து நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். வெந்தவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து சுருளக் கிளறி கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழைகளைத் தூவி இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 12-இல் புதுச்சேரி இடைக்கால பட்ஜெட்: முதல்வா் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்

புதுச்சேரி தோ்தல் கூட்டணி: காங்கிரஸ் தவிா்த்து மற்ற கட்சிகளுடன் திமுக ஆலோசனை

கூட்டணி! தமிழக நிலையே புதுச்சேரியிலும் தொடர வேண்டும்: முன்னாள் முதல்வா் நாராயணசாமி

தீ விபத்தில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் உயிரிழப்பு

திண்டிவனம் அன்னை இந்திரா காந்தி பேருந்து நிலையம்: முதல்வா் ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறாா்!

SCROLL FOR NEXT