மகளிர்மணி

வாழைத் தண்டு காரப் பொரியல்

வாழைத்தண்டை மோரில் பத்து நிமிடம் போட்டு வைக்கவும். முதலில் வாழைத்தண்டை நார் எடுத்து பொடியாக அரிந்தவுடன் மோரில் போட வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

வாழைத் தண்டு- 1
மோர்- 100 கிராம்
மஞ்சள் பொடி- 1 மேசைக் கரண்டி
பெரிய வெங்காயம்-1
தக்காளி-1
மிளகாய்த் தூள்-2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
சோம்பு- கால் தேக்கரண்டி
தேங்காய்த் துருவல்- 1 மேசைக் கரண்டி
உளுத்தம் பருப்பு- 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி- 1 ஆர்க்கு

செய்முறை:

வாழைத்தண்டை மோரில் பத்து நிமிடம் போட்டு வைக்கவும். முதலில் வாழைத்தண்டை நார் எடுத்து பொடியாக அரிந்தவுடன் மோரில் போட வேண்டும். கால் மணி நேரம் கழித்து மோரை வடிகட்டி, தண்டை மட்டும் எடுக்க வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, வாழைத் தண்டைப் போட்டு வதக்கி,  ஐந்து நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். வெந்தவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து சுருளக் கிளறி கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழைகளைத் தூவி இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்து தெரியுமா?

கோடீஸ்வரர் ஆனாரா மிடில் கிளாஸ்? - திரை விமர்சனம்

DINAMANI வார ராசிபலன்! | Nov 23 முதல் 29 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

நவ. 23-ல் திருமணம்..! விடியோ வெளியிட்டு உறுதிசெய்த ஸ்மிருதி மந்தனா.!

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

SCROLL FOR NEXT