வெப்ப அலையில் இருந்து தப்பிக்க..?
வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி நிழலில் உள்ள பகுதிகளில் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
*வெயில் கொளுத்தும் நாள்களில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்லாமல் வீட்டில் இருப்பது நல்லது. உடலின் மீது காற்று படும்படி வெளிர் நிற உடலை இருக்காத ஆடைகளை அணிய வேண்டும்.
*வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி நிழலில் உள்ள பகுதிகளில் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
*தர்பூசணி, திராட்சை போன்ற நீர் சேர்த்து நிறைந்த பழங்களையும், வெள்ளரிக்காய், தக்காளி போன்ற காய்கனிகளையும்
சாப்பிடலாம்.
*நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளதால், தயிர் சாப்பிடலாம்.
*தாகம் எடுக்காவிட்டாலும் நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பது அவசியம். வெளியே செல்லும்போது
தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்ல மறக்கக் கூடாது.
*'வெயிலில் பணியாற்றுவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். இருந்தால் கழுத்து, முகம், தலை, கை ஆகிய
பகுதிகளைத் துணிகளை கொண்டு மறைத்துக் கொள்ள வேண்டும்.
*மோர், எலுமிச்சை, பழரசம், நீராகாரம், ஓ.ஆர்.எஸ் உள்ளிட்டவற்றை அருந்த வேண்டும்.
*சோடா போன்ற சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இவை உடலில் நீச்சத்தைக் குறைத்து வறட்சி ஏற்படுத்தும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.