கேரட் சர்பத்
தேவையான பொருள்கள்:
கேரட்- 1
துண்டு இஞ்சி-1
Advertisement
Advertisement
தேன்- 3 மேசைக்கரண்டி
கொத்தமல்லி- சிறிதளவு
தண்ணீர்- இரண்டரை டம்ளர்
எலுமிச்சம் பழம்- 1
அலங்கரிக்க: கொத்தமல்லி
செய்முறை:
கேரட்டை சுத்தம் செய்து தோலை நீக்கி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய மிக்ஸி ஜாரில் கேரட், கொத்தமல்லி இலை, தோல் நீக்கிய இஞ்சியைப் போடவும். அதனுடன் தேவையான தண்ணீர் சேர்க்கவும். பின்னர் மைய அரைக்கவும். அரைத்ததை வடிகட்டவும். பின்னர் தேன் ஊற்றவும். அடுத்து எலுமிச்சை சேர கலந்து, பௌலில் ஊற்றி ஃபிரிஜ்ஜில் வைத்து தேவையானபோது கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மேலே கொத்தமல்லி தண்டை போட்டு ஜில்லென்று பரிமாறவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.