கேரட் சர்பத்
தேவையான பொருள்கள்:
கேரட்- 1
துண்டு இஞ்சி-1
Advertisement
Advertisement
தேன்- 3 மேசைக்கரண்டி
கொத்தமல்லி- சிறிதளவு
தண்ணீர்- இரண்டரை டம்ளர்
எலுமிச்சம் பழம்- 1
அலங்கரிக்க: கொத்தமல்லி
செய்முறை:
கேரட்டை சுத்தம் செய்து தோலை நீக்கி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய மிக்ஸி ஜாரில் கேரட், கொத்தமல்லி இலை, தோல் நீக்கிய இஞ்சியைப் போடவும். அதனுடன் தேவையான தண்ணீர் சேர்க்கவும். பின்னர் மைய அரைக்கவும். அரைத்ததை வடிகட்டவும். பின்னர் தேன் ஊற்றவும். அடுத்து எலுமிச்சை சேர கலந்து, பௌலில் ஊற்றி ஃபிரிஜ்ஜில் வைத்து தேவையானபோது கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மேலே கொத்தமல்லி தண்டை போட்டு ஜில்லென்று பரிமாறவும்.